இந்திய அரசின் “அர்ஜுனன் விருது” பெற பிரக்ஞானந்தா பரிந்துரை – வெளியான சூப்பர் தகவல்!
இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது. இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அர்ஜுனா விருது:
இந்திய அரசால் விளையாட்டு துறைகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜுனனின் வெங்கலச்சிலையோடு, ரூ. 15,00,000 ரொக்கமும் வழங்கப்படும். ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்காதவர்களுக்கு ஷாக் நியூஸ் – புதுவை அரசின் திடீர் முடிவு!
Exams Daily Mobile App Download
மேலும் அவர் சமீபத்தில் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார். அதனால் அர்ஜுனன் விருது பெற அவருடைய பெயரை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே அர்ஜுனா விருதுக்கு செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பக்தி குல்கர்னிக்கு இந்த விருது கிடைத்தால் அவர் தான் முதல் விருது பெறும் செஸ் வீரர் என்ற பெருமைக்கு உரியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.