தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகளை நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிட்டு உள்ளது.
10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள்:
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகின்ற நிலையில் பள்ளிகள் திறக்க ஆரம்பித்து மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் நாட்டில் உள்ள மாணவர்கள் முனைப்புடன் படித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி விளக்கம்!
அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 ம் தேதி வெளியிடப்படும். மேலும் அடுத்தாக, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்து உள்ளார். அது என்னவென்றால், புதிய பொது பாடத்திட்டத்தின்படி, 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு கட்டாயம். இதில் கருத்தியல் தேர்வுக்கு, 75 மதிப்பெண், செய்முறை தேர்வுக்கு, 25 மதிப்பெண்கள். நடப்பு கல்வி ஆண்டு செய்முறை தேர்வை, ஏப் 25 தேதி முதல் தொடங்கி, மே 2 க்குள் முடிக்க வேண்டும். காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல், மாலை 4 மணி வரையும் இரு வேளைகளில் நடத்த வேண்டும். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு ஒரு மணி நேரமும், உயிரியலில் தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, ஒரு மணி நேரமும் தேர்வு நடத்த வேண்டும். மேலும் இது தவிர இந்த செய்முறை தேர்வில் குறைந்தபட்சம், 15 மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது கட்டாயம். அதேபோல், பத்தாம் வகுப்பு எழுத்து தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் எடுக்க வேண்டியதும் கட்டாயம். இந்த மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே, பொதுத் தேர்வில் தேர்ச்சி வழங்கப்படும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.