தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு!
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது செய்முறைத் தேர்விற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
செய்முறைத் தேர்வு:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. அது மட்டுமில்லாமல் இரண்டு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் 3 முதல் 6ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஊக்கத்தொகை அறிவிப்பு!
இந்தாண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது மற்றும் பொதுத்தேர்வுக்குரிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக சரியாக பாடம் கற்பிக்காததால் தற்போது வேக வேகமாக பொதுத்தேர்வுக்குரிய பாடங்கள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியும் பொதுத்தேர்வு ஆரம்பமாக இருக்கிறது.
ExamsDaily Mobile App Download
மேலும், 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் மே 2 வரை நடைபெறவுள்ளது. எப்போதும் செய்முறைத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தற்போது மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய காரணத்தினால் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்விற்கும் இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவர்கள் தேர்வு பயத்தில் இருக்கின்றனர்.