தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு – பள்ளிக்கல்வி துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வுக்கு முன்பு செய்முறை தேர்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி 2022 – 2023ம் கல்வியாண்டுக்கான செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு:
தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதில் 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு.. நிர்பாத் சேவா திட்டம் அறிமுகம்! இனி பென்ஷன் பெறுவது ஈஸி!!
Follow our Instagram for more Latest Updates
அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதே போல 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான கால அட்டவணை வெளியானதையடுத்து மாணவர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கு முன்பு நடைபெறும் செய்முறை தேர்வுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.