டிப்ளமோ படித்தவர்களுக்கு பவர்கிரிட் ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதிநாள்!!
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாத ஊதியம் ரூ.27,500ல் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவர்கிரிட் ஆணைய வேலைவாய்ப்பு:
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் முன்னதாக காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருந்தது. அதில் Diploma Trainee பணிகளுக்கு என தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. PGCIL கார்ப்பரேஷனில் Diploma Trainee பணிகளுக்கு என 35 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
PGCIL கார்ப்பரேஷனில் Diploma Trainee பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.27,500/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பம்:
பதிவு செய்வோர் அனைவரும் Written Test/ Computer Based Test மூலமாக தேர்வு செய்யபடுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு ரூ.300ம், SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500ம் விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஜூன் 15ம் தேதியான நாளைக்கும் விண்ணப்பித்து பலனடையலாம் என்றும், நாளை தான் விண்ணப்பிக்க இறுதி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
M Gopinath s/o Manivel kannimarpalayam landhakottai (po)
Dindigul (Dt) Guziliamparai (Tk)