தமிழக அரசுத்துறை செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசுத்துறை செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் - அரசாணை வெளியீடு!
தமிழக அரசுத்துறை செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் - அரசாணை வெளியீடு!

தமிழக அரசுத்துறை செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் – அரசாணை வெளியீடு!

தமிழக அரசுத்துறை செயலர்களுக்கு அரசு கூடுதல் அதிகாரத்தை வழங்கி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி நிதி தொடர்பான செயல்முறைகளில் செயலர்கள் நிதுத்துறையின் ஒப்புதலை பெற தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அதிகாரம்:

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறைகளுக்கும் செயலாளர்கள் உள்ளனர். இவர்கள் முக்கிய அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1997 ம் ஆண்டு அரசுத்துறை செயலாளர்கள் சில விஷயங்களில் நிதித் துறை அனுமதியை பெறாமல் தனது துறையில் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்று அரசு தெரிவித்தது. இது குறித்த அரசாணையும் அப்போது வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

தற்போது இந்த அரசாணையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது செயலர்களுக்கு அரசு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இனி கூடுதல் நிதி தொடர்பான வேலைகளில் நிதித்துறையின் ஒப்புதலை செயலாளர்கள் பெற தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் செயலாளர்கள் பணியாளர்களுக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு வழங்கலாம்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறப்பு முகாம் – பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து அரசு விவகாரங்களில் வாதாடும் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு சம்பளம் வழங்குவது, நிபுணர்களுக்கான ஊதியம், ஊழியர்களுக்கு முன்பணம் வழங்குவது, அரசு நிர்ணயித்த இழப்பீட்டு தொகைகளை வழங்குவது உள்ளிட்ட விஷயங்களில் இனி செயலாளர்கள் நிதித்துறையின் ஒப்புதலை பெற தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழா செலவு, பயண செலவு, பராமரிப்பு செலவு ஆகியவற்றில் நிதித்துறை அனுமதி பெறாமல் செயலர்களே முடிவெடுக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!