பவர் ஸ்டார் சீனிவாசன் படப்பிடிப்பில் திடீர் மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி! தீவிர சிகிச்சை!
காமெடி நாயகன் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அதன் காரணமாக தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவர் ஸ்டார்:
தமிழ் திரையுலகில் நகைச்சுவைக்கென தனி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொடி கட்டி பறந்தவர் வடிவேலு. தற்போது தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை காமெடி நடிகர்களாக வலம் வருபவர்களில் ஒருவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். 2011ம் ஆண்டு லத்திகா எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனக்கு ஹீரோ அம்சம் செட் ஆகாத காரணத்தால் நகைச்சுவை நடிகராக அவதாரம் எடுத்தார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விவரம் – இறுதி பட்டியல்!
நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்தவர். கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா என பல படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் நகைச்சுவை நடிகர் இவர். இறுதியாக அவரது நடிப்பில் கேப்மாரி திரைப்படம் வெளியானது. இவருக்கு இசை மீது அதிக ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு துறைகளில் 4 லட்சம் காலிப்பணியிடங்கள் – முக்கிய கோரிக்கை!
தற்போது இவர் பிக்கப் டிராப் என்னும் திரைப்படத்தில் வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததாகவும், இதனால் அவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.