தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூன் 28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை ஜூன் 28 அன்று வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப் போவதாக அந்த மாவட்ட செயற்பொறியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர் .
மின்தடை:
தமிழகத்தில் மின்தடை, மின் இணைப்பில் பிரச்சனைகள் உள்ளிட்டவை ஏற்படாமல் இருக்க மின்வாரிய ஊழியர்கள் சார்பில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற ஜூன் 28 ந் தேதி வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கூடங்குளம், பழவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியின் நிமித்தம் அத்துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு ஓய்வூதியதரர்களுக்கு முக்கிய அறிவுப்பு – வீட்டில் இருந்தே உயிர்வாழ் சான்றிதழ் வழங்கல்!
அதாவது கூடங்குளம் மற்றும் பழவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார் குளம், விஜயாபதி, திருவம்பலபுரம், ஆவரைகுளம், அம்பலவாணபுரம், பழவூர், யாக்கோபுரம், சிதம்பரபுரம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே நாளை மறுநாள் ஜூன் 28 அன்று மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்ற தகவலை வள்ளியூர் மின்விநியோக செயற்பொறியாளர் வளனரசு அவர்களும், பழவூர் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீகலா அவர்களும் தகவல் தெரிவித்து உள்ளனர்.