தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழகத்தில் நேற்று பல மாவட்டங்களில் கடுமையான மின்தடை ஏற்பட்டது.தமிழ்நாடு மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் “மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம்“ வருவதற்கான பணிகள் நடைபெறுகின்றன.அதனால் மின்தடை ஏற்பட்டது.
மின்தடை பாதிப்பு
கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. கோடை வெயிலை எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, “இலவச மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்சம் விவசாயிகள் காணொலி காட்சி மூலம் அந்தந்தப் பகுதிகளில் இருந்து பங்கேற்றன.
ExamsDaily Mobile App Download
மேலும்,அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது சமூக வலைதளங்களில் மின் பாதிப்பு குறித்த மின்சார வாரியத்தை டேக் செய்தால், உங்களுடைய இணைப்பு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் மட்டுமே மின்தடை ஏற்படும் மற்ற சமயங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அறிவித்திருக்கிறார்.இன்று (நேற்று) இரவு தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
தமிழகத்தில் மே 5ம் தேதி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை – வணிகர் விடியல் மாநாடு!
மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்வெட்டு நீண்ட நேரம் நீடித்தது. இரவு 7 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 5 மணி நேரம் வரவில்லை. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் 4 இடங்களில் ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்படும் வணிக மற்றும் ஏற்றுமதி வசதி மையங்களில் ஒன்றை கோவையில் அமைக்க உள்ளனர் என்றும் ரூ.5.80 கோடி அரசு மானியத்துடன், கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி யில், அலுமினியம் அச்சு வார்ப்பு செய்யும் குறுங் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்கப்பட ஆவன செய்த முதல்வருக்கு கோவை மக்கள் நன்றி கூறுகின்றனர்.