தமிழகத்தில் நவ.6 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் நிலையில், நாளை நவம்பர் 6ம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளதாக திருத்துறைப்பூண்டி மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் முறையாக மின்சாரத்துறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தது. இதனால் புதிய தலைமையிலான ஆட்சி தொடங்கிய பிறகு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகளின் போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது. மேலும், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பராமரிப்பு பணிகளின் போது மின்தடை செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை – பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!
கடந்த ஆட்சியை விட தற்போது மின் தடை காலம் 1000 நிமிடங்கள் குறைந்துள்ளது. கடந்த ஆட்சியில் மின் மிகையாக இருந்தால் நிலுவையில் உள்ள புதிய இணைப்பு பட்டியலில் உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு இணைப்பு வழங்கி இருக்கலாம். மேலும், மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கும் முறை விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டியில் மின்வாரிய நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.8 முதல் LKG & UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் வேளூர், குன்னூர் மற்றும் கோட்டூர், எடையூர், சங்கேந்திர உதயமார்தாண்டபுரம் துணை மின் நிலையம், கோட்டூர் மற்றும் விளக்குடி, பள்ளங்கோயில், ஆலிவலம்,ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொருக்கை, கொக்கலாடி மற்றும் பெருகவாழ்ந்தான் துணைமின் நிலையத்திருந்து மின்விநியோகம் பெரும்பகுதிகளில் சனிக்கிழமை நவம்பர் 6ம் தேதியான நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று திருத்துறைப்பூண்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பா.ஆனந்த் அறிவித்துள்ளார்.