சென்னையில் ஜூலை 12ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் வெளியீடு!
தமிழகத்தில் கடந்த மாதம் மின்சார பராமரிப்பு பணிகளுக்காக பல இடங்களில் மின்தடை குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை செய்யப்பட்டது. இந்நிலையில் வருகிற ஜூலை 12ஆம் தேதி சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டது. இது குறித்து ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாதது தான் மின்தடைக்கு காரணம் என கடந்த மாதம் மாநிலம் முழுவதும் பணிகள் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
கொரோனா காரணமாக பலர் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் முன்னதாக மின்தடை ஏற்படும் பகுதிகள் தொடர்பான விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டு வருகிறது.
இந்திய ரயில்வே நிர்வாகத்தில் 2 ஷிப்ட்களில் பணி – புதிய அமைச்சர் உத்தரவு!
அதன்படி வருகிற திங்கட்கிழமை ஜூலை 12ஆம் தேதி சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நீலாங்கரை பகுதிகளில் மேலே செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் புதைவடமாக மாற்றும் பணிகள் மற்றும் வளைய சுற்று தர அமைப்பு செயலாக்கத்திற்கு கொண்டு வரும் பணிகளும் நடைபெறுவதால் வருகிற ஜூலை 12 ஆம் தேதி திங்கள் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
ப்ளு பீச் ரோடு, மரக்காயர் நகர் 1 முதல் 7வது தெரு வரை, கபாலீஸ்வரர் நகர் 4வது பிரதான சாலை, சீ வியுவ் அவென்யூ, முருகம்பாள் அவென்யூ, பெரிய நீலாங்கரை குப்பம், கேசுரினா டிரைவ் பகுதி.