தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை – மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு!

0
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை - மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை - மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை – மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த தகவலை பார்ப்போம்.

மின்தடை அறிவிப்பு:

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்களில் ஏற்படும் கோளாறுகள், மின் இணைப்பு, வயர்களில் உராய்வு பெரும் மரக் கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், சாய்ந்த மின் கம்பிகளை நிமிர்த்துதல் மற்றும் துண்டிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படி பட்ட பணிகளை மேற்கொள்வதால் மின் ஊழியர்களுக்கு மற்றும் மின் பயனாளர்களுக்கு பாதிப்படையாமல் இருப்பதற்கு மின்தடை செய்யப்பட்டு பணிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழ் நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில், தற்போது கோவில்பட்டி துணை மின் நிலையங்களில் மின் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் பசுவந்தனை உப மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் நாகம்பட்டி, சில்லாங்குளம், எம். துரைசாமிபுரம் உப மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சவலாப்பேரி, வாகைகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார். அதேபோல், எட்டயபுரம் பகுதியிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராமனூத்து, சிந்தலக்கரை, குமரெட்டியாபுரம், ஆர். வெங்கடேஸ்வர புரம், துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார்.

IRCTC ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோர் கவனத்திற்கு – வெயிட்டிங் உறுதிபடுத்தப்படுமா? முக்கிய தகவல்கள்!

அதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர் பகுதி துணை மின் நிலையங்களில் மின் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் சமத்துவபுரம், தேரிப்பனை, பிள்ளைமடையூர், ஏழுவரைமுக்கி, வடலிவிளை, தோப்பூர் , கொட்டங்காடு, ஞானியார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, வெங்கட்ராமானுஜபுரம், மெய்யூர், கடாட்சபுரம், அன்பின்நகரம், பிறைகுடியிருப்பு, பெரியதாழை, பூச்சிக்காடு பகுதிகள் மற்றும், சுதந்திர நகர், லெட்சுமிபுரம், பூந்தோட்டம், வடக்கு காயல்பட்டண உப்பள பகுதிகள், குரும்பூர் பஜார், முஸ்ஸிலீம் தெரு, அருளானந்தபுரம், வடக்கு பொத்தக்காலன்விளை, நரையன்குடியிருப்பு, மதகநேரி, பனைகுளம், வைத்தியலிங்கபுரம், ராமசாமிபுரம், சங்கிவிளை, சுப்ரமணியபுரம், வடக்கு குமாரசாமிபுரம், அம்மாள் புரம், வெள்ளாளன்விளை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜய் சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!