தமிழகத்தில் “இந்த” பகுதிகளில் நாளை மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில்
தமிழகத்தில் "இந்த" பகுதிகளில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் “இந்த” பகுதிகளில் நாளை மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் துறைகளில் ஒன்றான மின்சாரத் துறையில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகம் நிறுத்தப்படும். அந்த வகையில் நாளை (செப் 22) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரத்தை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்:

தமிழகத்தில் பொதுத்துறை அமைப்பான மின்சார வாரியம் மக்களுக்கு அடிப்படை தேவையான மின்சாரத்தை வழங்கி வருகிறது. இந்த துறையானது தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என அரசு குறிக்கோளுடன் இயங்கி வருகிறது. அதனால் மாதம் ஒரு நாள் மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் குறிப்பிட்ட மின்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அந்த வகையில் நாளை (செப் 22) தென்காசி மாவட்டம் கல்லிடைகுறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மாதேவி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கிருந்து மின்சாரம் பெறும் பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, இடையன்குளம், கங்கணாங்குளம், கரிசல்பட்டி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலசெவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மாதேவி, கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp பயனரா நீங்கள்? இனி தவறா மெசேஜ் பண்ணாலும் கவலையில்ல – புது அப்டேட்!

Exams Daily Mobile App Download

மேலும் நாரணபுரம் துணை மின் நிலையத்திலும் நாளை (செப் 22) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் வாசுதேவநல்லூர், தரணிநகர், திருமலாபுரம், சங்கனாபேரி, ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழபுதூர், நெற்கட்டும்செவவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை, தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மின் வினியோக செயற்பொறியாளர்கள் சுடலையாடும் பெருமாள் (கல்லிடைக்குறிச்சி), பிரேமலதா (கடையநல்லூர்) ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!