தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூன் 30 வரை மின்தடை!
தமிழகத்தில் பல இடங்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படுகிறது. மயிலாடுதுறை பகுதிகளில் ஜூன் 28 முதல் சுழற்சி முறையில் மின்தடை ஏற்படும் என மயிலாடுதுறை கோட்ட சொற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை இதனால் பல இடங்களில் மின்சார தடை ஏற்படுவதாக புகார் வந்தது. இதனால் கடந்த வாரம் முதல் ஒவ்வொரு பகுதியாக பராமரிப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 28 (இன்று) முதல் சுழற்சி முறையில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு – 3வது அலை அபாயம்!
இதுகுறித்து, மயிலாடுதுறை கோட்ட சொற்பொறியாளர் வெளியிட்ட அறிவிப்பின் படி, மயிலாடுதுறை, நீடூர்,மணக்குடி, பெரம்பூர் , குத்தாலம், மேக்கிரிமங்கலம், கடலக்குடி, பாலையூர் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.இந்நிலையில் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை சுழற்சி முறையில் மின்தடை ஏற்படும்.
அதன்படி ஜூன் 28: கூறைநாடு, கடக்கம், முத்தூர், கிளிமங்கலம், அகர சென்னியநல்லூர், கீழவெளி, மாதிரிமங்கலம், சிவராமபுரம், நல்லதாடி, கீழையூர், மறையூர், அசிக்காடு, காந்தமங்கலம்
ஜூன் 29: சென்னியநல்லூர், தட்சார், அண்ணாநகர்,எல்.பி.நகர், நமச்சிவாய புரம், சேமங்கலம்,கடம்பங்குடி, நச்சினார்குடி, வைகல், மாப்படுகை, பல்லவராயன்பேட்டை, புத்தகரம், அருவாப்பட்டி, நல்லத்துக்குடி, டவுன் ஸ்டேசன்.
TN Job “FB Group” Join Now
ஜூன் 30: கொத்தங்குடி, நாகம்பாடி, கீழமூலை, அன்னவாசல், இளையாளூர்,தரங்க சாலை, மாயூரநாதர் நகர், எடக்குடி, கிளியனூர், எலந்தங்குடி, நீடுர் பாவ நகர், நீடுர் மஜித் காலனி, வேப்பங்குளம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.