Power Shutdown: தமிழகத்தில் நாளை (13 அக்டோபர்) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – எங்கெங்கு தெரியுமா?

0
Power Shutdown: தமிழகத்தில் நாளை (13 அக்டோபர்) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - எங்கெங்கு தெரியுமா?
Power Shutdown: தமிழகத்தில் நாளை (13 அக்டோபர்) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - எங்கெங்கு தெரியுமா?
Power Shutdown: தமிழகத்தில் நாளை (13 அக்டோபர்) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. உங்கள் பகுதியும் இதில் உள்ளதா என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

பவர்கட்:

மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் தற்போது மின்சாரமும் சேர்ந்துள்ளது. மின்சாரம் இல்லாமல் நம்மால் 1 மணி நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், மாதம் தோறும் மின்வாரியங்களில் நடத்தப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் போது பகுதி வாரியாக தகுந்த முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. இதனால் மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை திட்டமிட்டு முன்கூட்டியே செய்து கொள்வதற்கு வசதியாக உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் உள்ள படிக்காசு வைத்தான்பட்டி மம்சாபுரம், வலையபட்டி, ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 12.10.2022 ஆகிய வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

தமிழகத்தில் வேலை தேடுவோர் கவனத்திற்கு.. சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download

இதனால் இந்த மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான பூவாணி, புதுப்பட்டி, சொக்கம்பட்டி, குன்னூர், இடையன்குளம், காந்திநகர், பாறைகுளம், கொத்தம்பட்டி, புதுப்பட்டி,செண்பகத்தோப்பு,மம்சாபுரம், லட்சுமிபுரம், கரிசல்குளம்,கொத்தங்குளம் வீட்டு வசதி வாரியம், வைத்தியலிங்கபுரம், வன்னியம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் கோட்ட பொறியாளர் சின்னதுரை அறிவித்துள்ளார்.

இதேபோல் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி உப மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் தமிழ்நாடு சிறப்பு பதினோராவது காவல் படை, வாட்டர் ஒர்க்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, சுந்தரராஜபுரம், எஸ் திருவெங்கடபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!