திருப்பூரில் நாளை (ஜூலை 28) மின்தடை – பகுதி விவரம்! மின்வாரியம் தகவல்!
திருப்பூரில் நாளை (ஆகஸ்ட் 2) செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஒரு நாள் மட்டும் மின் விநியோகம் சில பகுதிகளில் தடை செய்யப்படும் என மின்வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் எதிர்பாராத விபத்துக்கள் நேரிட அதிகளவு வாய்ப்புள்ளது. அவற்றை தவிர்ப்பதற்காக தான் இந்த பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு மின் தடை செய்யப்படும்.
TCS, Wipro, HCL Tech நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சம்பள உயர்வு & WFH திட்டங்கள்!
மேலும், மின்தடை செய்யப்படவுள்ள இடங்களை குறித்த தகவல்களும் முன்னதாகவே மின் வாரியம் சார்பில் செய்திக்குறிப்பில் வெளியாகும். அவ்விதமாக நாளை (ஆக. 2) திருப்பூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியின் நிமித்தமாக பல்லடம் துணை மின் கீழ் வரும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது பல்லடம் துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் பழுது பார்க்கும் பணி நாளை நடைபெற இருக்கிறது. அத்துடன் அவற்றின் மீதுள்ள மரம், செடி கொடிகள் அகற்றப்பட்டு சீரான மின் விநியோகம் செல்வதற்கு ஏதுவாக பராமரிப்பு பணியை மேற்கொண்டு பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசா கவுண்டம்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு நாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.