கவனம் மக்களே.. தமிழகத்தில் அக்.15 மின்தடை – கரண்ட் இருக்கும் போதே வேலைய முடிச்சிருங்க!
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் அக்.15ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆனாலும் மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்ததால் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது.ஏற்கனவே அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் எப்போதும் போல வழங்கப்படும். அத்துடன் குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு மானிய விலை மின்சாரம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின் விபத்துகளை தவிர்க்கும் நோக்கிலும், பாதுகாப்பான தடையில்லா மின்சாரத்தை நுகர்வோர்களுக்கு வழங்கும் நோக்குடனும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றப்படுகிறது. மேலும் உறுதியான வயர்கள், மின் கம்பிகள் பொருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 15ம் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நீங்கள் ‘இந்த’ பகுதியை சேர்ந்தவரா? நாளை மின்தடை அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
அதனால் அத்திமரப்பட்டி, , கேம்ப் – 1, கேம்ப் – 2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், வடக்கு தெரு தோப்புத் தெரு, முள்ளக்காடு, அபிராமி நகர், அனல் மின் நகர் பகுதி, பொட்டல்காடு, பாரதி நகர், சுனாமி நகர், சவேரியார்புரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்