தமிழகத்தில் மின்தடை? அவதூறாக பேசினால் கடும் நடவடிக்கை! அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!

0
தமிழகத்தில் மின்தடை? அவதூறாக பேசினால் கடும் நடவடிக்கை! அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!
தமிழகத்தில் மின்தடை? அவதூறாக பேசினால் கடும் நடவடிக்கை! அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!

தமிழகத்தில் மின்தடை? அவதூறாக பேசினால் கடும் நடவடிக்கை! அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!

தமிழகத்தில் தற்போது மின்தடை அதிகமாக ஏற்பட்டு வருகிறது. அதனைக் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் உலவி வரும் நெட்டிசன்கள் மின்தடை குறித்து அவதூறாக செய்திகளை பரப்பி வருகின்றனர். அதை எச்சரிக்கும் விதமாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

மின்வெட்டு:

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் ஒரு நாள் கூட ஏன் ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.தொழிற்சாலை முதல் வீடுகள் வரை மின் தேவை என்பது இருந்து வருகிறது. அதற்கேற்றவாறு அதற்கான கட்டணங்களும் அதன் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு மாறி வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதிகமாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதனைக் காரணமாக வைத்து சமூக வலைத்தளங்களில் சுற்றி வரும் நெட்டிசன்கள் பலர் தற்போது தமிழக அரசு குறித்து அவதூறாக செய்திகளை பரப்பி வருகின்றனர். அதை கண்டிக்கும் விதமாக தற்போது தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது, தமிழகத்தில் ஏற்படும் மின்தடை குறித்து சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவலை யாரும் பரப்ப வேண்டும். அவ்வாறு மீறி பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி மட்டும் அதிகபட்சமாக மின் நுகர்வாக 17 ஆயிரத்து 380 மெகாவாட் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மேலும் இந்த மின் தடையானது தமிழகம் மட்டுமில்லாமல் ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!