தமிழகத்தில் சனிக்கிழமை (அக்.15) மின்தடை – பெரும்பாலான பகுதிகளில் கரண்ட் இருக்காது! முழு விவரம் இதோ!
சென்னையில் துணை மின் நிலையங்களில் அக்.15ம் தேதி (நாளை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அதனால் குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் அனைத்து துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் சீர் செய்யப்படுகிறது. இந்த பணிகளின் போது மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்படுகிறது.
இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை சென்னையில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர் ஐ.டி.காரிடர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் போரூரில் ருக்மணி நகர், பூந்தமல்லி, தேவதாஸ் நகர், நண்பர்கள் நகர், ஆகிய பகுதிகளிலும், அடையாறில் சோழ மண்டல தேவி நகர், திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் எழுத படிக்க தெரிந்தவரா? உங்களுக்கான அரசு வேலை இதோ!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து வானகரத்தில் நூம்பல் மெயின் ரோடு, எஸ்.ஆர்.எம்.சி செட்டியார் அகரம் மெயின் ரோடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தாக ஆவடி பகுதியில் முருகப்பா பாலிடெக்னிக், பிருந்தாவன் அவென்யூ ஆகிய பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும். அதனை தொடர்ந்து பட்டாபிராம் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், செந்தமிழ் நகர், அண்ணா நகர் ஆகிய இடங்களிலும் அதே போல அம்பத்தூரில் அயபாக்கம், வி.ஐ.பி. பாக்ஸ் ஆகிய பகுதிகளிலும் ஐ.டி.காரிடர் பகுதியில் ஸ்டேட் பாங்க் காலனி, ஓ.எம்.ஆர்.பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்