சிவகங்கை மாவட்டத்தில் மார்ச் 5 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியில் மார்ச் 5ஆம் தேதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் மின்தடை ஏற்படும் என்று அறிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உயர் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கும் போது எல்லாம் அந்தந்த மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும். மேலும் மின்தடை செய்யப்படும் முன்னரே அந்தந்த மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும். இந்த நிலையில் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆலியா மனசா? கணவர் சஞ்சீவ் விளக்கம்!
இந்நிலையில் மின் விநியோகம் தடைபடும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்பே தகவல்கள் சென்று விடும். இது மட்டுமில்லாமல் இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுத்தப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகர் பகுதியில் வரும் மார்ச் 5 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட்ட உள்ள பகுதிகள், காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், செக்காலைக்கோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுப்பட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூர் சாலைகள், செஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்ய இருப்பதாக காரைக்குடி கோட்ட செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்து உள்ளார்.