இன்று திருச்சியின் முக்கிய பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!!

0
இன்று திருச்சியின் முக்கிய பகுதிகளில் மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!!
இன்று திருச்சியின் முக்கிய பகுதிகளில் மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!!
இன்று திருச்சியின் முக்கிய பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!!

திருச்சியின் முக்கிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ள காரணத்தால் காலை 10 மணி முதல் 1 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மின்தடை:

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் கடந்த 9 மாதங்களாக நடக்காத நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் பராமரிப்பு பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் மின் பராமரிப்பு செய்யப்படும் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கு மின்தடை செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதேபோல், திருச்சியின் அம்பிகாபுரம் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மின் பாதைகளில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஒரு பாடமாக அறிமுகமாகிறது திருக்குறள் – சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு!

இதனால் அம்பிகாபுரம் மெயின்ரோடு, கீழ அம்பிகாபுரம், இந்திரா நகர், காந்திஜி தெரு, இரயில் நகர், ஆண்டாள் நகர், இராஜப்பா நகர், ராயல் அவென்யூ, இராணுவ காலனி (7 முதல் 12-வரை உள்ள தெருக்கள்) ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் சிவலிங்கம் மற்றும் திருவெறும்பூர் உதவி செயற்பொறியாளர் நாராயணன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல்,வரும் திங்கட்கிழமை ஜூன் 21ம் தேதி அன்று, காவேரி நகர், அண்ணா நகர், கோல்டன் நகர், ஸ்டார் நகர், தொழிற்பேட்டை, கணபதி நகர், சீனிவாச நகர், நேருஜி நகர், அம்மா குளம், கல்லாங்குத்து, காமராஜ் நகர், ஹரிணி நகர், எஸ். ஐ. டி, என் எஸ் பி அவென்யூ, சாரதா நகர், காந்தி தெரு, டேவிட் தெரு, அப்துல்கலாம் ஆசாத் தெரு, அப்துல்லா தெரு, ஜெகநாதபுரம், கல்யாணராமன் தெரு, ஸ்டாலின் தெரு, சந்தைப் பேட்டை மலை, தீப்பெட்டி கம்பெனி தெரு, சந்தோஷ் நகர், சக்தி நகர், எல். ஐ. சி நகர், அம்மன் நகர் மெயின் மற்றும் கிழக்கு விஸ்தரிப்பு, ராஜ் நகர், சிறீ ராம் நகர், ஆர். கே புரம், வெங்கடேஷ்வராநகர், விவேகானந்தர் நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், திருவெறும்பூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகளிலும் ஜூன் 19ம் தேதியின் இன்று சோழமாதேவி, சோழமாநகர், பிரகாஷ் நகர், வேங்கடராமன், குமரேசபுரம், பத்தாளப்பேட்டை, கிளியூர் ஆகிய பகுதிகளிலும், ஜூன் 21ம் தேதி RSK நகர், பகவதிபுரம், காந்தி நகர், பாரதி புரம், கணேசன் ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!