கன்னியாகுமரியில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கோட்டத்தில் அமைந்துள்ள உப மின்நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 11) மாதாந்திர பராமரிப்பு பணியின் நிமித்தம் மின்தடை செய்யவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின்தடை :
மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமாகும் அபாயம் உண்டாகும். இதனை தவிர்ப்பதற்காகவே தமிழகத்தில் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்புகளும் முன்னரே சென்று விடும்.
Exams Daily Mobile App Download
அவ்விதமாக நாளை (ஆக.11) குழித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்க இருக்கிறது. இப்பணியின் போது மின் பாதைகளில் இருக்கும் பழுதை நீக்கவும், மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்ளப்படும். அப்போது மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்குமாறு மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இனி வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம் தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவென்னி ஆகிய இடங்களுக்கு அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்குறிப்பிட்ட பணியின் நிமித்தம் நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.