தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு – நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மின்சார பராமரிப்பு காரணமாக வருகிற சனிக்கிழமை (ஜூலை 17) அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. கடந்த 9 மாதங்களாக மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறாததே இந்த மின்தடைக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மின்தடை ஏற்படாமல் சரி செய்யப்பட்டுள்ளது.
T20 உலகக்கோப்பை போட்டி – ஒரே குழுவில் இடம்பிடித்த இந்தியா, பாகிஸ்தான்!
தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி விட்டதால் பல இடங்களில் மின் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பலர் வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். மேலும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மின்தடை குறித்த அறிவிப்பை மின்சார வாரியம் முன்னதாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாளை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து பழனி மாவட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராமலிங்கம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பழனி துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நாளை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பழனி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் வரும், பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, மற்றும் சின்னக்கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.