சிவகங்கையில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி துணை மின் நிலையங்களில் நாளை(ஏப்ரல் 5) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் உலகத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் இருக்க முடியாது. ஆனாலும் மின் தடை ஏற்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். இது போல சென்னை போன்ற பெரு நகரங்களில் மின்தடை ஏற்படும் போது ஒரு நாளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – LTA செலுத்துவதற்கு நாமினியை மாற்றலாம்! புதிய விதிகள்!
இந்த நிலையில் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி துணை மின் நிலையத்தில் நாளை(ஏப்ரல் 5) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், காரைக்குடி நகர்ப்புற பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள், செக்கலக்கோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுகட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூர் சாலை, செஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.