தமிழகத்தில் நாளை (செப். 09) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (09. 09. 2022) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல் மற்றும் மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகளை கண்டறிந்து சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.
Post Officeல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அசத்தல் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
நாளை (09.09.2022) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், குளத்தூர் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மந்திகுளம், செங்கற்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து ராமச்சந்திராபுரம் ஆகிய பகுதிகளிலும் கீழ வைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் ஆகிய பகுதிகளிலும், சூரங்குடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் ஆகிய பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்