செப்.22ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் – வெளியீடு!
கமுதி கோட்டை மேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மின்தடை:
தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆங்காங்கே மின் ஊழியர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்திருக்கும் தி.மு.க பதவிக்கு வந்ததும் மீண்டும் மின்தடை ஏற்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து விளக்கமளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
வீட்டுக்கு ஒரு அரசு பணி, வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.3000 – முதல்வர் உறுதி!
அதனை தொடர்ந்து மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது என கூறினார். மற்ற பகுதிகளை தொடர்ந்து கமுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அனுமதி!
கமுதி கோட்டை மேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கமுதி நகா், கண்ணார்பட்டி, கோட்டைமேடு, தலைவா நாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.