தமிழகத்தில் நாளை (அக்.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மின்தடை:
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. எனவே நாளுக்கு நாள் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இது குறித்து விளக்கமளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் நவ.1 முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தல்!
மேலும் தற்போது மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அவர் கூறினார். மற்ற பகுதிகளை தொடர்ந்து காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
PF அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய குறிப்புகள்!
- மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டி
- நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூர், கம்பளியம்பட்டி
- வெள்ளகோவில், நடேசன் நகர், ராஜீவ்நகர், கொங்குநகர், டி.ஆர்.நகர்
- பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகர், கே.பி.சி.நகர், சேரன்நகர், காமராஜபுரம்.
- தாசவநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளி பாளையம், காட்டுப்பாளையம்
- சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு
- குமாரபாளையம், சாலைப்புதூர், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு
- கும்பம்பாளையம், சேர்வ காரன்பாளையம். அய்யம்பாளையம், பாப்பம்பாளையம்
- மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம்
- கே.ஜி.புதூர், என்.ஜி.வலசு, வரக்காளி பாளையம், மேட்டுப்பாளையம்
மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு ஊழியர்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் கணேஷ் கூறியுள்ளார்.