தமிழகத்தில் நாளை (மே 28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தேனி மாவட்டத்தில் உள்ள 11 கே.வி.கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்கிற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்னணு சாதனங்கள் அனைத்தும் சரி பார்க்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்களில் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுகிறது. மின்னணு சாதனங்கள் பழுதாவதன் காரணமாக அறியாத விதமாக பல விபத்துகளும் நடக்க காரணமாகி விடுகின்றன. இந்த மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்ய தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தகுதியில்லாதோர் அட்டைகள் பறிமுதல்! அரசின் முக்கிய உத்தரவு!
மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளுக்கு முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள 11 கே.வி.கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கமுதி பஸ் நிறுத்தம், கண்ணார்பட்டி, முத்துமாரி நகர் தர்கா ரோடு, ஆதி பராசக்தி நகர், வெள்ளைய தேவன் நகர், தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய குழு அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் ஆண்டிபட்டி பகுதியில் சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரிய குழு அறிவித்துள்ளது. அதாவது தமிழ்நாடு மின்சாரவாரிய பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள ஆண்டிபட்டி உபமின்நிலையத்தில் மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மதுரை – ஆண்டிபட்டி பிரதான சாலை, பேருந்து நிலைய பகுதிகள், ஸ்ரீநிவாசன் நகா், கொண்டமநாயக்கன்பட்டி, காமராஜா் நகா் பகதிகளில் வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.