தமிழகத்தில் நாளை (மே 27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (மே 27) வெள்ளிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மதியம் முதல் மாலை வரை மின் விநியோகம் சில பகுதிகளில் தடை செய்யப்படும் என மின்வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் விபத்துகள் ஏற்படும். அவற்றை தவிர்ப்பதற்காக தான் இந்த பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி!
அவ்விதமாக சந்தைப் பேட்டை துணை மின் நிலையம்,பெருமாநல்லூர் துணை மின் நிலையம் மற்றும் வேலம்பாளையம் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் நாளை மே 27 அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
சந்தைப் பேட்டை துணை மின் நிலையம்: பகுதியை சுற்றியுள்ள புதுார் பிரிவு, எல்லோரா கார்டன், சுப்ரமணிய நகர் மற்றும் செரங்காடு பகுதிகள்
பெருமாநல்லூர் துணை மின் நிலையம்: பகுதியை சுற்றியுள்ள குருவாயூரப்பன் நகர் கிழக்கு, படையப்பா நகர், நல்லகட்டிபாளையம், கூலிபாளையம், வாவிபாளையம், வலசுப்பாளையம், பொரசப்பாளையம், ரோஜா கார்டன், பாலசமுத்திரம், தாண்டாகவுண்டன் புதூர், வாரணாசி பாளையம், செரங்காடு, தெற்கு சீராபாளையம், காளி பாளையம் புதூர், பெருமாநல்லுார், அண்ணா நகர், பாண்டியன் நகர் ஒரு பகுதி, பூலுவபட்டி நால்ரோடு மற்றும் காமராஜ் நகர் பகுதிகள்
வேலம்பாளையம் துணை மின் நிலையம்: தண்ணீர் பந்தல் காலனி, அம்மாபாளையம் ஒரு பகுதி, 15 வேலம்பாளையம் ஒரு பகுதி, பெஸ்ட் ரோடு, அம்மன் நகர், பூலுவபட்டி நால்ரோடு ஒரு பகுதி, விக்னேஸ்வரா நகர், சின்ன புதூர், பாலாஜி நகர் மற்றும் அய்யப்பா நகர் ஒரு பகுதி.
Exams Daily Mobile App Download
அவினாசி துணை மின் நிலையம்: ரங்கா நகர், குள்ளே கவுண்டம்பாளையம் ஒரு பகுதி, கந்தம்பாளையம், கந்தம்பாளையம் நால்ரோடு, ஆட்டையம்பாளையம் ராயர் கோவில் பகுதி, காசிகவுண்டன்புதூர் ஒரு பகுதி, தேவராயம்பாளையம் ஒரு பகுதி மற்றும் எம்.எஸ்., வித்யாலயா பள்ளி பகுதிகள் என மேற்குறிப்பிட்ட துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.