தமிழகத்தில் நாளை (மே 25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நாளைய தினமான மே 25 அன்று உடுமலை உட்பட சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்போவதாக அந்தந்த பகுதிகளின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் மேலும் படியுங்கள்.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் நாளை (மே 25 புதன்கிழமை) பாலப்பம்பட்டி, பூலாங்கிணர், கிளுவன் காட்டூர் மற்றும் அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம் என நான்கு மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்பணியின் நிமித்தம் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்:
தொட்டியனுார் பீடர், பெரியகோட்டை பிரிவு, சுந்தர் நகர், அண்ணா குடியிருப்பு, மலைப்ப கவுண்டர் லே-அவுட், காந்திநகர், நேரு வீதி, ராஜேந்திரா ரோடு, நேரு நகர், கல்யாணி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை செய்யப்படும்.
பூலாங்கிணர் துணை மின் நிலையம்:
தளி பீடர், வாளவாடி, தென்பூதிநத்தம், அம்மாபட்டி, அமணசமுத்திரம், தளி, திருமூர்த்திநகர், ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, சின்ன குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம்:
கொமரலிங்கம் மற்றும் மில் பீடர், கொமரலிங்கம், சாமராயபட்டி, பெருமாள் புதுார், கொழுமம், வீரசோழபுரம், குப்பம்பாளையம், ருத்ராபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் தெரிவித்துள்ளார்.
அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம்:
துறையூர், மஞ்சநாயக்கனுார், அரசூர், கம்பாலபட்டி மற்றும் குள்ளேகவுண்டனுார் ஆகிய அங்கலக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.