தமிழகத்தில் மே 18, 19 ஆம் தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் மே 18, 19 ஆம் தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மே 18, 19 ஆம் தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மே 18, 19 ஆம் தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள வைரமங்கலம் பகுதியில் வருகிற மே 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அம்மாவட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம்:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏனெனில் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடைபெறலாம். அவற்றை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்று மின் கம்பம் சம்பந்தப்பட்ட சில பணிகளின் நிமித்தம் மின் விநியோகம் இருக்காது.

TNPSC தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர வேண்டுமா? சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள்!

ஈரோடு மாவட்டத்தில் வைரமங்கலம் பகுதியிலுள்ள தலைவாய்ப்பேட்டை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள மின் கம்பம் மற்றும் மின் கம்பிகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் வருகிற செவ்வாய் மற்றும் புதன் கிழமை என இரு நாட்களும் காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

Exams Daily Mobile App Download

இதை குறித்து ஈரோடு மாவட்ட மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அவர் கூறியதாவது, வைரமங்கலம் பகுதியில் சுற்றியுள்ள கொங்கு நகர், சிவசக்தி நகர், கரட்டு பாளையம், ஆசாரி கரட்டுப்பாளையம் மற்றும் வெங்கமேடு ஆகிய பகுதிகளில் மே 18, 19 ஆகிய தேதிகளில் காலை 9 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!