கோவையில் நாளை (மே 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பேட்டை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (மே 13) அன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடப்பதற்கான காரணங்கள், மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!
தமிழ்நாட்டில் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது கோயம்பத்தூர் மாவட்டத்தில் நாளை மே 13 அன்று மின் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் காலை 9 மணியில் தொடங்கி மாலை 5 மணி வரையிலும் போட்டிபட்டி, அண்ணா நகர், காமராஜர் நகர், பள்ள பாளையம், கொங்கலக்குறிச்சி, சுண்டக்கம்பாளையம், ராகல்பாவி, குறிச்சி கோட்டை, வி.ஜி.ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கோயம்பத்தூர் மாவட்ட மின் வாரிய செயற்பொறியாளர் கே.அறம் வளர்த்தான் தெரிவித்துள்ளார்.