மதுரை மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் மொண்டிக்குண்டு, அச்சம்பத்து ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 5) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும். மேலும் அவ்வாறு மின் விநியோகம் தடை படும் பகுதிகளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பாக அறிவிப்புகள் தெரிவிக்கப்படும். அது மட்டுமல்லாமல் மின்சாரம் தடைபட்டாலும் இன்வெர்ட்டரை வைத்து மின்சாரத்தை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் – ஜாக்பாட் அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள மொண்டிக்குண்டு, அச்சம்பத்து ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 5) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் முன்னரே தங்களது வேலைகளை முடித்துக் கொள்ளுமாறு தெரிவித்து உள்ளனர்.
மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள், உத்தப்பநாயக்கனூர், வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணி கல்லூரி, வெள்ளையப்பன் நாயக்கனூர், புதுக்கோட்டை, துரைசாமிபுரம் புதூர், ஆகிய பகுதிகளிலும், அடுத்தாக அச்சம்பத்து துணை மின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளான, நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, வடபழஞ்சி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்ய இருப்பதாக மின் வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது.