திருநெல்வேலியில் நாளை (ஜூன் 9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின்கோட்டத்தில் நாளை (ஜூன் 9) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின் தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது குறித்து அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மின் பயனர்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ் – புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த பராமரிப்பின் போது மின் கம்பங்களின் அருகே மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. மேலும் மின் கம்பிகள், வயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டை கருங்குளம், திசையன்விளை, குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தெரிந்துள்ளது
Exams Daily Mobile App Download
.
அதனை தொடர்ந்து சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, விஜயநாராயணம், குட்டம், ஆனைகுடி, முதுமொத்தன்மொழி மற்றும் வள்ளியூர், செம்பேடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி மற்றும் மாவடி ஆகிய பகுதிகளில் ஜூன் 9 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அப்பகுதி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.