நாளை மறுநாள் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
புதுச்சேரி மாவட்ட வில்லியனூர் துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்கிழமை (ஜூன் 7) அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை
தமிழகம் முழுவதும் அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை பராமரிப்பது அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு மின் நிலையங்களில் விபத்துகள் நேரிடும். அவற்றை தவிர்ப்பதற்காக மாதம் ஒருமுறை மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் போது அதனை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இருப்புத்தொகை கணக்கீடு செய்யும் வழிமுறைகள் இதோ!
அவ்விதமாக நாளை மறுநாள் திங்கட்கிழமை (ஜூன் 7) அன்று புதுச்சேரி மாவட்டத்தில் மரப்பாலதில் உள்ள வில்லியனூர் மின்பாதையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது. அதனால் காலை 9.30 மணியில் இருந்து பகல் 1.30 மணி வரை ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலைவாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், மூலக்குளம், ஜே.ஜே. நகர்,
Exams Daily Mobile App Download
அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், உழவர்கரை பேட், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், புதுநகர் (ஒரு பகுதி), ராமலிங்கா நகர், தட்சிணாமூர்த்தி நகர், வில்லியனூர், பத்மினி நகர், வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட், மூர்த்தி நகர் (ஒரு பகுதி), சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், கிருஷ்ணா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அம்மாவட்ட மின்வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.