மதுரையில் நாளை (ஜூன் 7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை ஜூன் 7 ஆகிய நாளை வில்லாபுரம், பசுமலை உட்பட சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்ய போவதாக அம்மாவட்ட செயற்பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை படும் என்ற விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
மின்தடை:
தமிழகத்தில் நாளை ஜூன் 7ல் மதுரை மாவட்ட வாடிப்பட்டி, பசுமலை மற்றும் வில்லாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இப்பணியின் நிமித்தம் துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு மின் தடை செய்யப்படும் என அந்தந்த மின்வாரிய செயற்பொறியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
வாடிப்பட்டி துணை மின் நிலையம்:
எல்லையூர் சமயநல்லூர் கோட்டம் வாடிப்பட்டி மின் நிலையத்தில் பராமரிப்பு பனி மேற்கொள்ள உள்ளதால் அதனை சுற்றியுள்ள எல்லையூர், ராமராஜபுரம், செம்மினி பட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன் கொட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், தாடகை நாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
வில்லாபுரம் துணைமின் நிலையம் :
வில்லாபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாய் மேற்கு பகுதிகள், எப்.எப். ரோடு , வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்துபுரம் 1-வது மற்றும் 2-வது மெயின் வீதி, பாரதியார்ரோடு, ஜீவாநகர் 1-வது மற்றும் 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல்நகர், சோலையழகுபுரம் 1-வது முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளிப் பகுதிகள்.
Exams Daily Mobile App Download
முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே. புரம், சுப்பிரமணியபுரம் பகுதிகள், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகள், ராஜம்ரோடு, மீனாட்சிரோடு, நேருநகர், டி.வி.எஸ். நகர், பொன்மாரி நகர், அழகப்பா நகர் மெயின்ரோடு, எல்.எல். ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
பசுமலை துணை மின் நிலையம் :
பசுமலை உபமின் நிலையத்திற்குட்பட்ட பைக்கரா மேட்டுத்தெரு, அம்பேத்கர் நகர், அண்ணாநகர், தியாகராஜா காலனி, கோபால்சாமி நகர், பசுமலை மெயின் ஆர்ச் வரை, டேனியல் தெரு, பி.ஆர்.சி. பின்புறம், பசுமலை சர்ச், ஜோன்ஸ்புரம், பசுமலை ஜி.எஸ்.டி. ரோடு, பசுமலை மூட்டா காலனி, விநாயகநகர், ராயப்பன் நகர், பெத்தானி நகர், கோபாலபுரம், முனியாண்டிபுரம், சீனிவாசா கிராமம், ஆதிசிவன் நகர், மொட்டமலை, ஜோசப் நகர், எம்.எம்.டபிள்யூ.சி. காலனி, விளாச்சேரி கிராமம், திருநகர் 3 முதல் 5-வது ஸ்டாப், உச்சாமோடு பாலுச்சாமி தெரு, மருதுபாண்டியர் தெரு, மங்களம்மாள் சாலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.