திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 7) மின் தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை ஜூன் 7ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் காலை முதல் மதியம் வரை மின்தடை அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மின்தடை:
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் மின்கம்பங்களில் ஏற்படும் மின்கசிவு மற்றும் மின் பாதையில் நிகழும் சில பிரச்சனைகளால் விபத்துகள் நேரிடுகிறது. இவற்றை தவிர்ப்பதற்காகவே மாதம் ஒருமுறை பராமரிப்பு பணி கட்டாயமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பணி நடைபெறும் பொழுது ஆங்காங்கே மின் விநியோகமும் தடை செய்யப்படும்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல் – முதல்வரின் முடிவு என்ன?
அவ்விதமாக நாளை ஜூன் 7 ல் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் மினுக்கம்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஒட்டன்சத்திரம் துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட தாழையூத்து மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழி பழனி சாலை, தென்றல்நகர், காந்திநகர், சோதனைச்சாவடி, உழவர்சந்தை, சம்சுதீன் காலனி, கருவூலக காலனி, அண்ணாநகர், தும்மிச்சம்பட்டிபுதூர், தாழையூத்து பம்ப் ஹவுஸ் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இதேபோல் மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் மினுக்கம்பட்டி, அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, வி.புதுக்கோட்டை, சிக்குபள்ளம்புதூர், தேக்கம்பட்டி, தோப்புபட்டி, குன்னம்பட்டி, குட்டம், எஸ்.குட்டம், ஆசாரிபுதூர், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.