திருப்பூரில் நாளை (ஜூன் 3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் நிலையங்களில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் நாளை பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை இந்த துணை மின்நிலையத்தில் பயன்பெறும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் நாள்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு பிரச்சனை காரணமாக எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் விபத்துகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாதந்தோறும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. மேலும் இதனை மின்வாரியம் முறையாக அறிவித்து அதன்பின் செயல்படுத்துகிறது.
ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இதனை தொடர்ந்து தற்போது திருப்பூரில் உள்ள பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அத்துடன் பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துளுக்கம்பாளையம், வாய்பாடிபுதூா், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம், உத்தராண்டிபாளையம், புலவனூா் மற்றும் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.