திருச்செந்தூரில் நாளை (ஜூன் 11ம் தேதி) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (ஜூன் 11) இப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை பாதிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது பெரும்பாலான இடங்களில் மின்னணு சாதனங்களில் கோளாறு, மின் தொய்வு மற்றும் மின்னணு துண்டிப்பு ஆகியவை ஏற்படுவதால் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், மரக் கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, தடையில்லா மின் விநியோகம் வழங்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்டோ பயண கட்டணம் உயர்வு? விரைவில் வெளியாக உள்ள ஷாக் அறிவிப்பு!
அதாவது அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் மின் தடை செய்ய முடியாது. ஆகையால், பழுது பார்க்க உள்ள இடங்களில் மட்டும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும், மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. அதனால் மக்கள் மின் பணிகளை முன்கூட்டியே செய்ய ஏதுவாக உள்ளது. திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், மின்தடை பகுதிகளான பிலோமி நகர், அடைக்கலாபுரம் – ஆறுமுகநேரி ரோடு, நயினார்பத்து, சீர்காட்சி, முதலூர் ஏபி நகர், கருவேலம்பாடு, வீராக்குளம், மடத்துவிளை, பிரண்டார்குளம், உடன்குடி, கடாட்சபுரம், அன்பின்நகரம், மெய்யூர், வெங்கட்ராமானுஜபுரம், அடைக்கலாபுரம், ராணி மகாராஜபுரம், சுனாமி நகர், அண்ணா நகர், செட்டிவிளை, பெரியதாழை, தோப்புவிளை, இடைச்சிவிளை ஆலந்தலை, கணேசபுரம், கந்தசாமிபுரம், ஆலந்தலை மெயின் ரோடு, சுனாமி நகர், ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை ஜூன் 11ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.