தமிழகத்தில் நாளை (ஜூன் 11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ராமநாதபுர மாவட்ட கமுதி கோட்டை மேடு துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 11) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை :
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மின் ஊழியர்கள் மூலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – கூடுதல் சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு!
மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் மற்றும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும். அவ்விதமாக ராமநாதபுர மாவட்டத்தில் கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
Exams Daily Mobile App Download
அப்பணியின் நிமித்தம் கமுதியில் உள்ள மண்டலமாணிக்கம் பகுதி உட்பட வீரசோழன் வழித்தடத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான சின்னஉடப்பங்குளம், பெரியஉடப்பங்குளம், வலையபூக்குளம், எழுவணூா், காக்குடி, போத்தநதி, பெருமாள் தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளார்.