தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன்11) சனிக்கிழமை அன்று திருப்பத்தூர் பகுதி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அதனை சுற்றி உள்ள வட்டாரங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்ற விவர பட்டியலை மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின் தட்டுப்பாடு தான் காரணம் என்றும் அதனை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியீடு!
அவ்விதமாக நாளை (ஜூன் 11) சென்னை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அம்மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெரும் சுற்று வட்டார பகுதிகளான திருப்பத்தூா் நகரம், ஹவுசிங்போா்டு, கல்லூரி, ஆசிரியா் நகா், பாச்சல், திரியாலம், அச்சமங்கலம், சி.கே.ஆசிரமம், கருப்பனூா், பொம்மிகுப்பம், குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடப்பள்ளி, செலந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், கொரட்டி, சுந்தரம்பள்ளி, பேராம்பட்டு, குனிச்சி, ஆதியூா், நந்தனம் கல்லூரி, மொளகரம்பட்டி, எலவம்பட்டி, செவ்வாத்தூா்,தோரணம்பதி,
Exams Daily Mobile App Download
கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தாகரம், பாரண்டப்பள்ளி, திரியாலம், ஆண்டியப்பனூா், மூலக்காடு,ஜவ்வாதுமலையில் உள்ள புதூா்நாடு, புங்கம்பட்டுநாடு மற்றும் நெல்லிவாசல்நாடு, ஜெயபுரம், சந்திரபுரம், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூா், முகமதாபுரம், செட்டேரிடேம், சுண்ணாம்புக்குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூா், அன்னசாகரம் ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.