தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் ஜூலை 5ந் தேதி பெரம்பலூர் பகுதி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மின் ஊழியர்கள் மூலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அப்பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், முன்னதாகவே எந்தெந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்ற விவரங்களையும் அம்மாவட்ட மின்வாரியம் தகவல் வெளியிடும்.அவ்விதமாக நாளை மறு நாள் ஜூலை 5ல் பெரம்பலூர் பகுதியில் உள்ள மங்கூன் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடையாகும் என பெரம்பலூர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் கூற்றியுள்ளார்.
Exams Daily Mobile App Download
பெரம்பலூர் பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் செல்வராஜ் கூறியிப்பதாவது:
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் வருகிற ஜூலை 5ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மேலப்புலியூர், மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.