தமிழகத்தில் நாளை (ஜூலை 11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை ஜூலை 11 அன்று மேலூர் பகுதி உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 10 மணியளவில் தொடங்கி பிற்பகல் 4 மணி வரை அங்கிருந்து மின் விநியோகம் பெரும் சுற்று பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணியில் மின் சாதனங்கள் சரியாக உள்ளதா மற்றும் மின் கம்பங்களில் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கப்படும். அதன் மூலம் மின் கம்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் ஆபத்துகள் நேரிடும் அபாயம் குறைக்கப்படும்.
ரயில் பயணங்களுக்கான முன்பதிவு கட்டாயம்? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இவ்வாறு மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மின் ஊழியர்கள் மூலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அப்பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அவ்விதமாக நாளை ஜூலை 12ல் மேலூர் மாவட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் அம்மின்னிலையத்திலிருந்து மின்விநியோகம் பெரும் சுற்று வட்டார பகுதிகளுக்கு மின் தடை செய்யப்படவுள்ளது. எனவே மேலூர் பகுதி, நாட்டார் மங்கலம்,தனியாமங்கலம், அ. வல்லாளப்பட்டி, ஒத்தக்கடை, உறங்கான்பட்டி, ஆகிய பகுதிகளில், நாளை திங்கட்கிழமை பராமரிப்பு பணியின் நிமித்தம் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அம்மாவட்ட மின் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.