மதுரையில் நாளை (டிச.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

0
மதுரையில் நாளை (டிச.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (டிச.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (டிச.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக மதுரையில் உள்ள கோ.புதூா், சோழவந்தான் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.22) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. ஆதலால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் மேற்கொள்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படுவது குறைகிறது. அதனால் மின் வாரியம் மாதந்தோறும் மின்தடையை அறிவித்து மின் பராமரிப்பு பணிகளை முறையாக சரி செய்து வருகிறது.

TNPSC தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – தமிழ் மொழியில் 40% மதிப்பெண் கட்டாயம்!

அதனை தொடர்ந்து நாளை மதுரையில் உள்ள கோ.புதூா், சோழவந்தான் ஆகிய மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான சோழவந்தான் நகா் பகுதிகள், தச்சம்பத்து, குடிநீரேற்று நிலையம், இரும்பாடி, மீனாட்சி நகா், மேலக்கால், கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், திருவேடகம், தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், ஊத்துக்குழு, அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் இருக்காது என்றும் மின் பராமரிப்பு பணிகள் முடித்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.27 கடைசி நாள்!

மேலும் கோ.புதூா் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான கோகலே சாலை, வெங்கட்ராமன் தெரு, லஜபதிராய் சாலை, பழைய அக்ரஹாரம் தெரு, சப்பாணி கோயில் தெரு, சரோஜினி தெரு, சொக்கிகுளம் அண்ணா நகா், டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, விஷால் மால், ராமமூா்த்தி சாலை, கமலா 2-ஆவது தெரு, பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, வல்லபாய் சாலை, பெசன்ட் சாலை, ஜவஹா்புரம், திருவள்ளுவா் நகா், ஆத்திகுளம், குறிஞ்சி நகா், ஹெச்.ஏ கான் சாலை, ஆயுதப்படை குடியிருப்பு, ரேஸ்கோா்ஸ் சாலை, டிஆா்ஓ காலனி, புதூா் வண்டிப் பாதை, ரத்தினசாமி நாடாா் சாலை, அழகா்கோவில் பிரதான சாலை, பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் மூக்க பிள்ளைத் தெரு, புதுநத்தம் சாலையில் ஒரு பகுதி, விஸ்வநாதபுரம், கிருஷ்ணாபுரம் காலனி, விசாலாட்சிபுரம், சொக்கநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!