தமிழகத்தில் நாளை மறுநாள் (டிச.9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக சென்னையில் உள்ள தாம்பரம், சோழிங்கநல்லூர், பொன்னேரி பகுதிகளில் வருகிற வியாழக்கிழமை அன்று மின்தடை என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. தற்போது மழைக்காலம் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது இதனால் மின் கம்பிகளில் பிளவு ஏற்பட்டு சாலைகளில் விழுந்துள்ளன. இதனால் ஏராளமான இடங்களில் தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆதலால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை குறிப்பிட்ட நேரம் செலவிட்டு மேற்கொள்ள வேண்டும். அதனால் மின் வாரியம் மாதந்தோறும் மின்தடையை அறிவித்து மின் பராமரிப்பு பணிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறது.
மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ..!
இதனால் பல்வேறு விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனை மின்வாரியம் முறையாக அறிவித்த பின் செயல்படுத்தப்படும். இதனை தொடர்ந்து நாளை மறு நாள் டிசம்பர்- 9ஆம் தேதி அன்று மின் பராமரிப்பு பணிக்காக சென்னையில் உள்ள தாம்பரம், சோழிங்கநல்லூர், பொன்னேரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தாம்பரம் பகுதிகளில் உள்ள கிருஷ்ணா நகர் ஆஞ்சநேயர் கோயில் தெரு, காலமேகம் தெரு, அகத்தியர் தெரு, நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பக விநாயகர் தெரு, கோவிலம்பாக்கம் ஷோபா, 200 அடி ரேடியல் தெரு, கிருஷ்ணா நகர், மணிமேகலை நகர், காகிதபுரம், பம்மல் அண்ணா சாலை, எம்.ஜி.ஆர் தெரு, ஆதாம் தெரு, நாகல்கேணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
டிச.12ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து – அரசின் முக்கிய முடிவு!
அத்துடன் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள செம்மஞ்சேரி மெஜஸ்டிக் குடியிருப்பு, ஓ.எம்.ஆர் பகுதி, ஜவஹர் நகர், எழில் முக பாலதோட்டச் சாலை ஆகிய பகுதிகளிலும் பொன்னேரி பகுதியில் திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர்.கண்டிகை, கண்ணக்கோட்டை, சின்னபுலியூர், பெரியபுலியூர் ஆகிய பகுதிகளிலும் டிசம்பர் 9-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது