தமிழகத்தில் நாளை (டிச.3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக நாளை (டிச.3) பேரளி துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் மின் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்கு மின் கசிவு மற்றும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் கோளாறுகள் தான் முக்கிய காரணமாகின்றன . தற்போது மழைக்காலம் என்பதால் ஏராளமான இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் சாலைகளில் ஏராளமான இடங்களில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் அநேக இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
இதன் விளைவாக இரவு நேரங்களில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்கின்றன. இதற்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் செலவிட்டு மின் பராமரிப்பு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மின் விபத்துகள் ஏற்படுவது குறைந்துள்ளது. அதனால் மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின்தடை அறிவிப்பை தொடர்ச்சியாக அறிவிக்கிறது.
இதனை தொடர்ந்து நாளை பேரளி துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மின்நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான பேரளி, மருவத்தூா், ஒதியம், பனங்கூா், கல்பாடி, அசூா், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கீ.புதூா், வாலிகண்டபுரம் மற்றும் செங்குணம் கே.எறையூா், நெடுவாசல், கவுள்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.3) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்றும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தின் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.