தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 6) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள உப மின்நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 6) மாதாந்திர பணி நடைபெற உள்ள காரணத்தால், மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஏ.கே. முருகையன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
மின்தடை:
மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்களும் முன்னரே அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் ஆக.9 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
அவ்விதமாக சிவகங்கை பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (ஆக. 6) அன்று மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது அம்மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு மின்தடையாகும் என்ற தகவல்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சிவகங்கை கோட்ட செயற்பொறியாளர் ஏ.கே. முருகையன் செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் :
சிவகங்கை நகரில் மதுரை சாலை, காந்தி வீதி, சேதுபதி தெரு, தெப்பக்குளம் பகுதி, கோட்டை முனியாண்டி கோயில் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை அம்மாவட்ட துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளவிருக்கும் பராமரிப்பு பணியின் நிமித்தம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.