தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அருள்புரம் நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக சாலைகளிலும் ஒரு சில இடங்களில் எக்கச்சக்கமாக விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் தமிழக அரசு மின் வாரியத்தின் சார்பில் இவ்வாறு விபத்துகள் நடைபெறாமல் கண்காணித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின் வாரியம் சார்பில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
இந்நிலையில் நாளை திருப்பூர் மாவட்டத்தில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியத்தின் சார்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அத்துடன் சேர்ந்து மின்தடைக்கான நேரமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து திருப்பூரில் உள்ள அருள்புரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உயரழுத்த மின் கம்பிகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள், கணபதிபாளையம், சௌடேஸ்வரி நகர், கிரீன் பார்க், ராயல் அவென்யூ, சிரபுஞ்சி நகர், கங்கா நகர், எஸ் எம் சி காலனி, எஸ்ஆர்சி காலனி, பாலாஜி நகர், திருமலை நகர், பொன் நகர், அவரப்பாளையம், அல்லாலபுரம், வடுகபாளையம், அகிலாண்டபாளையம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்