நாமக்கலில் நாளை (ஏப்ரல் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 12) அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்கள் சரிபார்ப்பு மற்றும் மின் கம்பங்களில் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு என்று ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் துணை மின் நிலையத்தின் சார்பில் மின் ஊழியர்கள் சரி பார்பர். மேலும் அந்தந்த ஊர் மக்களுக்கு மின்தடைக்கான அறிவிப்புகள் முன்னரே தெரிவிக்கப்பட்டு விடும். இந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி!
இந்நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஏப்ரல் 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நலவடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணாங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.