திருப்பூரில் நாளை (அக்.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் மாதந்தோறும் மாவட்டம் வாரியாக உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதியை சேர்ந்த மின் ஊழியர்கள் மூலம் பணிகள் நடைபெறுகிறது. மின் பராமரிப்பு நேரங்களில் மின் கம்பங்களை சரி செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக மின் தடை செய்யப்படுகிறது. அந்த நேரங்களில் பணிகள் நிறைவு பெரும் வரும் மின் பயனாளர்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – பொது நிகழ்ச்சிகளில் அனுமதி இல்லை!
மின்தடை தேதியையும், நேரத்தையும் அந்த பகுதியின் செயற்பொறியாளர் மூலம் முன்னறிவுப்பு செய்யப்படுகிறது. மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. மின் ஊழியர்கள் துணை மின் நிலையங்களில் மின் இணைப்புகளை சரி பார்த்து தேவையான மாற்றங்களை செய்கின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (05.10.2021) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள் :
- மல்லபுரம்
- கொமரலிங்கம்
- பெரிசனம்பட்டி
- மல்லேகவுண்டன்பாளையம்
- ஆறாக்குளம்
- கிளுவன்
- ருத்ராபாளையம்
- குட்டியகவுண்டனூர்
- ஊத்துக்குளி
- கே.என்.புரம்
- காட்டூர்
- பார்த்தசாரதி
- கரடிவாவி
- வேப்பங்குட்டைபாளையம்
- புதூர்
- எலையமுத்தூர்
- சாமராய பட்டி
- செலக்கரச்சல்
- புளியம்பட்டி
- கொழுமம்
- ஜக்கம்பாளையம்அப்பநாயக்கன்பட்டி
- கே.கிருஷ்ணாபுரம்
Tamilnadu